இரண்டு பாடசாலை மாணவிகளின் உயிரை பறித்த புகையிரத விபத்தின்! காணொளி sri lanka Dehiwala Train



www.indiasian.com sri lanka Dehiwala Train
தெஹிவளை பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவிகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

புறக்கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி நேற்றிரவு பயணித்த புகையிரதத்தில் மோதி இவர்கள் உயிரிழந்துள்ளனர். விருந்துபசாரத்திற்கு வந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் பம்பலபிட்டிய பிரதேசத்தில் உள்ள மகளீர் பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த இரண்டு மாணவிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றூர்தியில் வந்து இறங்கிய அவர்கள் பின்னர் விருந்துபசாரம் இடம்பெறும் இடத்திற்கு செல்வதற்காக புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

19 வயதான குறித்த யுவதிகளின் ஒருவர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய யுவதி களனி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்

| Privacy Policy